விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

கே.பி.ஹரன்

2006-09-29 by விருபா - Viruba | 3 கருத்துகள்
கே.பி.ஹரன்

இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராகவும் நல்லதொரு சமயவாணராகவும் திகழ்ந்தவர் கே.பி.ஹரன். தனது 23வது வயது முதல் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும் பின்னர் "வீரகேசரியில்" (1939-1959) 20 ஆண்டுகள், "ஈழநாட்டில்" (1959-1979) 20 ஆண்டுகள் என்று தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இரு இதழ்களிலுமே அவர் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.

1906.10.17 இல் தஞ்சைமாவட்டம் திருவையாற்றில் பிறந்த இவருடைய இயற்பெயர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் என்பதாகும்.

1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் டாக்டர் சண்முகரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.

1979 இல் சென்னை திரும்பிய அவர் தனது 75 ஆவது வயதில் 1981.10.14 அன்று சென்னை மயிலாப்பூரில் காலமானார்.

"சுயநலப் பற்றற்று நாட்டிற்கு நற்பணிபுரியும் பரந்த மனப்பான்மையுடன் பத்திரிகையாளன் செயற்படும்போதுதான் பத்திரிகைகள் நாட்டுக்கு பயனுள்ள சேவை செய்ய முடியும்" என்ற மகாத்மா காந்தியின் வரைவிலக்கணத்தை தாரக மந்திரமாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் நற்பணியாற்றியவர் கே.பி.ஹரன்.

இனிது நீடூழி வாழியவே என்ற தலைப்பில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ஈழநாடு பத்திரிகையின் பத்தாண்டு நிறைவையொட்டி எழுதிய வாழ்த்துச் செய்தி.

இலங்கையில் தமிழர் இலங்குறும் வளஞ்சார்
யாழ்ப்பாண நன்னகர்க் கண்ணே
துலங்குறும் ஈழ நாடெனும் பெயரைச்
சூடியே நாளித ழாக
நலங்கொள்ச் செய்தி விரித்தறி வினையே
நயம்பெற விளங்குகட் டுரைகள்
கலங்களு ரொழிக்கும் சமயத்தின் விளக்கம்
காட்டியே மலர்வதொன் றுண்டால்

பன்னெடுங் காலம் நாளிதழ் சமைக்கும்
பணியினில் அணிபெற ஓங்கி
நன்னய முறவே தலையங்கம் சமய
நலஞ்சொலும் கட்டுரை யாதி
இன்னிய லுடனே எழுதுதல் வல்லார்
இயற்பெயர் அரனெனும் பெரியார்
மன்னிய நல்லா சிரியரென் றமைந்து
வளர்வதிந் நாளிதழ் இனிதே!

இத்தகு பெயர்கொள் ஈழநா டிப்போ
திலகிய பத்தாண்டு நிரம்பி
வித்தக முடனே தமிழர்கள் போற்ற
விளங்கியே நலம்செய்து வளரும்
சத்தியங் கரந்தான் முருகவேள் அருளால்
தாரணி யிற்புகழ் பெருக்கி
எத்திசை யினரும் போற்றமே லோங்கி
இனிது நீ டூழிவா ழியவே


தமிழ் மாருதம்

2006-09-28 by விருபா - Viruba | 0 கருத்துகள்
தமிழ் மாருதம்

செந்தமிழ்ச்செல்வர் தமிழாகரர் டாக்டர் ச.சாம்பசிவனார் அவர்களால் மதுரையிலிருந்து வெளியிடப்படும் இதழ் "தமிழ் மாருதம்" ஆகும்


உங்கள் நூலகம்

2006-09-26 by விருபா - Viruba | 0 கருத்துகள்
உங்கள் நூலகம்

NCBH என்று சுருக்கமாக அறியப்படும் புது யுக புத்தகப் பண்ணையின் வாசகர் அமைப்பான "நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்" வெளியிடும் இதழ் உங்கள் நூலகம் ஆகும்.

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்ற வாசகத்துடன் தமிழில் வெளியாகும் நூல்கள் ப்றறிய விமர்சனங்களையும், பதிப்புத் தொழில் தொடர்பான பல விடயங்களையும் தாங்கி இவ்விதழ் இரண்டு மாதங்களுக்கொருமுறை மலர்கிறது.

இதன் ஆசிரியராக ஆர்.பாத்தசாரதி உள்ளார்.


**********************************

எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களில்,
  • அதிக மதிப்புரைகளைப் பெற்ற புத்தகங்கள்,
  • அதிக புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகம்,
  • அதிக புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்,
  • புதிதாக இணைக்கப்பட்ட எழுத்தாளர்,
  • புதிதாக இணைக்கப்பட்ட பதிப்பகம்
  • அதிக புத்தகங்களைக் கொண்ட புத்தகப்பிரிவு

போன்ற தகவல்களை நிலவரம் என்னும் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


தமிழ்ப்பணி

2006-09-20 by விருபா - Viruba | 1 கருத்துகள்
தமிழ்ப்பணி


பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களால் ஆரம்பிக்ப்பட்டு, தற்சமயம் அவருடைய மகன் வா.மு.சே.திருவள்ளுவர் அவர்களால் நடத்தப்படும் இதழ் தமிழ்ப்பணி


***************************

எமது தளத்தில் இதுவரையில், 380 தமிழ் எழுத்தாளர்கள் 69 பிரிவுகளில் எழுதியுள்ள 672 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.

37 சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களையும் இணைத்துள்ளோம்.


மகாகவி

2006-09-19 by விருபா - Viruba | 0 கருத்துகள்
மகாகவி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிலிருந்து வெளிவரும் இதழ் "மகாகவி" ஆகும்.

இதன் ஆசிரியர் ; வதில்லைபிரபா


***********

எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 379 தமிழ் எழுத்தாளர்கள் 68 பிரிவுகளில் எழுதியுள்ள 667 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.


பன்முகம்

2006-09-14 by விருபா - Viruba | 0 கருத்துகள்
பன்முகம்

பின்நவீனத்துவம் பற்றி பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, புதுப்புனல் வெளியீடாக, காலாண்டிதழாக வெளிவரும் கலை இலக்கியக் கோட்பாட்டு இதழ் பன்முகம் ஆகும்.


***********

எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 376 தமிழ் எழுத்தாளர்கள் 66 பிரிவுகளில் எழுதியுள்ள 660 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.


புதிய புத்தகம் பேசுது

2006-09-11 by விருபா - Viruba | 1 கருத்துகள்
தமிழில் வெளிவரும் புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்து முகமாக அப்புத்தகங்கள் பற்றிய ஆய்வாளர்களின் விமர்சனங்கள், மற்றும் பதிப்புத் தொழில் பற்றிய பல தகவல்களைத் தாங்கி வெளிவரும் இதழ் புதிய புத்தகம் பேசுது. தமிழ் எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் பலவும் இவ்விதழின் சிறப்பாகும்.

பல தமிழ்ப் பதிப்பகங்களின் விளம்பரங்களுடன் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்கள்களும் உள்ளன.பல புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களை அச்சில் பெற விரும்பும் வாசகர்களுக்கு இவ்விதழ் ஒரு அரிய வரவாகும்.

பல்வேறு இடையூறுகளிற்கு மத்தியில் இவ்விதழிற்காக சிறப்பாக பணியாற்றும் இதன் ஆசிரியர் க.நாகராஜன் அவர்களையும் ஆசிரியர் குழுவினரையும் எமது தளத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.

இவ்விதழ் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாகும்.


புதிய காற்று

2006-09-08 by விருபா - Viruba | 0 கருத்துகள்
புதிய காற்று


தமிழுலகிற்கொரு புதிய அனுபவமாக, மதுரையிலிருந்து வெளிவரும் இதழ் புதிய காற்று.
இதன் ஆசிரியராக ஹமீம் முஸ்தபா உள்ளார்.



எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 375 தமிழ் எழுத்தாளர்களின் 659 தமிழ்ப் புத்தகங்களையும், 33 சிற்றிதழ்களையும் இணைத்துள்ளோம்.


தேசிய வலிமை

2006-09-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்
தேசிய வலிமை


வீடுவாழ நாட்டை வாழ வை என்ற குறிக்கோளுடன் மதுரையிலிருந்து வெளிவரும் இதழ் தேசிய வலிமை ஆகும். இதன் ஆசிரியராக கவிஞர் சுரா.சாமிநத்தம் உள்ளார்

************************************

எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரை 652 தமிழ்ப் புத்தகங்களையும், 32 சிற்றிதழ்களின் 105 வெளியீடுகளையும் இணைத்துள்ளோம்.


இலக்கியப்பீடம்

2006-09-05 by விருபா - Viruba | 0 கருத்துகள்


மூத்த எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளிவரும் இதழ் இலக்கியப்பீடம் ஆகும்


இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For